திருப்பத்தூர் அருகே இலவச கண் சிகிச்சை முகாம் திருப்பத்தூர், ஆக.30& திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் சேச்ஞ் தொண்டு நிறுவனம், ஆப்ஸ் நிறுவனம் ஈக்விட்டாஸ் டெவலப்மெண்ட் இன்டிடேட்டிவ்ஸ் நிறுவனம் மற்றும் சென்னை அகர்வால் கண் மருத்துவமனை ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை  மற்றும் இலவச விழி லென்ஸ் பொருத்தம் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி சுரேஷ், துணைத் தலைவர் இசைவாணி கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தனர். ஹேப்ஸ்  நிறுவன இயக்குனர் பழனிவேல்சாமி, சேஞ்ச் நிறுவன இயக்குனர் சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹரிகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.  இதில் 250 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகளை வழங்கப்பட்டது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் அறுவைசிகிச்சைக்கும், கண் கண்ணாடி வழங்கவும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் உஷா, ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விக்னேஷ் நன்றி கூறினார்.
None